
“சகோதரர் மகேந்திர சிங் தோனி என் மீது வைத்த நம்பிக்கை எனக்கு எனது ஆட்டத்தில் பெரிதும் உதவியது” என இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.
“தோனி எனக்கு பெரிதும் உதவியுள்ளார். தொடக்கத்தில் ஐபிஎல் களத்தில் நான் ரன் சேர்க்க தவறியபோது என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். அதனால் நான் உறுதியுடன் ஆட்டத்தை அணுகினேன். அதன் மூலம் ரன்களும் சேர்த்தேன். அவர் கொடுத்த ஆலோசனைகள் இலங்கைக்கு எதிரான தொடரில் உதவும் என நம்புகிறேன்” என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் தேசிய அளவிலும், ஐபிஎல் களத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் லீக்கில் விளையாடி வருகிறார் ருதுராஜ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hjU2Jd
via IFTTT
0 Comments
Thanks for reading