பாகிஸ்தான் உடன் விளையாடும் இங்கிலாந்து அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியுடன் பயணிக்கும் நான்கு பின்கள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட வீரர்கள் அனைவரையும் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது அந்த அணியின் கிரிக்கெட் வாரியம். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில்  மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வீரர்கள் அடங்கிய புதிய அணியாக இந்த தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது. 

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தொற்று பாதிப்பு ஆளானவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qLVCqs
via IFTTT

Post a Comment

0 Comments