காயத்தினால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

வரும் 23 ஆம் தேதி அன்று ஆரம்பமாக உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ். 

“தவறான நேரத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தினால் நான் எனது முதல் ஒலிம்பிக்கை மிஸ் செய்கிறேன். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன். எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி. 2022இல் நடைபெற உள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் மாதிரியான தொடர்களில் வலுவான கம்பேக் கொடுப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

2018இல் இளையோருக்கான சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் ஹிமா தாஸ்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hDRPqY
via IFTTT

Post a Comment

0 Comments