இந்திய கால்பந்தாட்ட வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கால்பந்தாட்ட அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நடுகள வீரரான 23 வயது அனிருத் தபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுறையின் பேரில் அனிருத் தபா தன்னை ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்கதேசத்தையும், மேலும் வருகிற 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்களில் அனிருத் தபா விளையாட முடியாதது இந்திய கால்பந்தாட்ட அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3imkt1G
via IFTTT

Post a Comment

0 Comments