
பயமில்லா கிரிக்கெட்டை விளையாட என்னை ஊக்கப்படுத்தியவர் கேப்டன் விராட் கோலி என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்.
இங்கிலாந்தில் ஜூன் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியில் தேர்வாகியிருக்கிறார் சுப்மன் கில். இவர் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி பலரது கவனத்தை ஈர்த்தார். தொடக்க பேட்ஸ்மேன்கள் வரிசையில் நம்பிக்கைக்குறிய இளம் வீரராக உருவாகி வருகிறார் சுப்மன் கில்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுப்மன் கில் "எப்போதும் பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என கூறுவார் விராட் கோலி. ஒரு பேட்ஸ்மேனுக்கு மனநிலை மிகவும் முக்கியம். அதுவும் பேட்டிங் செய்யும்போது நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துவார். ரோகித் சர்மாவும் நானும் எதிரணியின் பவுலிங் குறித்து நிறைய விவாதிப்போம். அதன்படியே பந்துகளை எதிர்கொள்வோம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஒரு தொடக்க வீரராக, இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும், ஒருநாளில் விளையாடப்படும் மூன்று செசன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செசன்களிலும் விளையாடுவது முக்கியமானது. இங்கிலாந்தில் எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்குமோ, அப்போதெல்லாம் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். சூரியன் வெளியே வந்து வெயில் அடிக்கும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்" என்றார் சுப்மன் கில்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vhAv0E
via IFTTT
0 Comments
Thanks for reading