ஆசியக் கோப்பை குத்துச்சண்டை: இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஷிவ தபா, அமித் பங்கால்

துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் ஷிவ தபா தகுதிப் பெற்றுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4 -0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பகோதுர் உஸ்மோனோவை வீழ்த்தி 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 91 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் துர்சுனோவ் சான்ஜரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

image

60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் வரிந்தர் சிங் 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். 69 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பாதுரோவ் பாபா உஸ்மானை சந்தித்தார். இதில் முதல் ரவுண்டில் கண் அருகில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் பாதியில் விலக நேரிட்டது. இதனால் பாதுரோவ் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டினார். விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hYdGv8
via IFTTT

Post a Comment

0 Comments