
இங்கிலாந்தில் உள்ள கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2020- 21 சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி அணி. கடந்த நான்கு பிரீமியர் லீக் சீசனில் அந்த அணி வென்றுள்ள மூன்றாவது சாம்பியன் பட்டம் இது.
2020 - 21 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி விளையாடிய 35 போட்டிகளில் 25 வெற்றி, 5 தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐந்து போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. அதன் மூலம் மொத்தமாக 80 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
“இந்த வெற்றி மிகவும் கடினமான உழைப்பினால் கிடைத்துள்ளது. இதை எங்கள் அணியின் ரசிகர்களுடன் கொண்டாட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் அந்த அணியின் மேலாளர் பெப் கார்டியோலா.
பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி வென்றுள்ள ஐந்தாவது சாம்பியன் பட்டம் இது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3w395vc
via IFTTT
0 Comments
Thanks for reading