"தோனிக்காக எந்தவித யோசனையுமின்றி குண்டடியை கூட தாங்கிக்கொள்வோம்"-கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி

தோனிக்காக நாங்கள் எந்தவித யோசனையுமின்றி குண்டடியை கூட தாங்கிக்கொள்வோம் என்று இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள கே.எல்.ராகுல் "இந்தியாவுக்காக நிறைய பெருமைகளை சேர்த்துள்ளார் தோனி. நாட்டுக்காக முக்கியமான கோப்பைகளை ஒரு கேப்டனாக அவர் பெற்றுத்தந்துள்ளார். இவற்றையெல்லாம் விட நான் பெருமையாக நினைப்பது, அவர் சக வீரர்களை மரியாதையாக நடத்துவது. அவரின் இந்த நடத்தைக்காகவே, அவருக்காக நாங்கள் எந்தவித யோசனையுமின்றி துப்பாக்கி குண்டுகளைக் கூட தாங்கிக்கொள்ள தயாராக இருந்தோம்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு முதலில் வரும் பெயர் தோனி மட்டுமே. ஏனென்றால் நாங்கள் அனைவரும் தோனியின் காலத்தில் விளையாடியுள்ளாம். அவர் ஒரு சகாப்தம். இப்போது இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறோம். நான் அவரிடம் முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது வாழ்வில் ஏற்றமோ தாழ்வோ, எப்போதும் ஒரே மன நிலையில் இருப்பது, நாட்டை முன்னிலைப்படுத்துவதுதான்" என்றார் கே.எல்.ராகுல்.

இந்தியாவுக்காக அனைத்து வகையான ஐசிசி கோப்பையையும் வாங்கிக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்றார். ஆனால் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wmOkL6
via IFTTT

Post a Comment

0 Comments