
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி தகுதிப்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா, போபண்ணா ஜோடி வென்றது. மொத்தம் 47 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் வெற்றி பெற்ற சானியா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AuYoow
via IFTTT
0 Comments
Thanks for reading