உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : இங்கிலாந்தில் லேண்டானது இந்திய அணி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அவர்களுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க பயணித்திருந்தனர். 

இந்திய அணி லண்டனில் பத்திரமாக தரையிறங்கியதை இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலின் ட்வீட் உறுதி செய்துள்ளது. அந்த ட்வீட்டில் விமானத்திற்கு முன்னதாக ராகுல் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து ‘வந்தடைந்தோம்’ என தெரிவித்துள்ளார். 

ஜூன் 18 முதல் செப்டம்பர் 14 வரை டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இந்தியா இங்கிலாந்தில் முகாமிட்டு விளையாடுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ifwo1e
via IFTTT

Post a Comment

0 Comments